செய்திகள் :

செயற்கை மழை: டெல்லி அரசு முன்னெடுக்கும் `மேக விதைப்பு' நடவடிக்கை ஏன்? - இது பலன் தருமா?

post image

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக செயற்கை மழையை பொழியவைக்க டெல்லி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த மழைக்காக ஜூலை 4 முதல் 11-ம் தேதிவரை மேக விதைப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ``மேக விதைப்புக்கான வானிலை ஜூலை 3 வரை இல்லை என்பதால் ஜூலை 4-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கவிருக்கிறது. இதற்கான செயல்பாடுகளை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) கான்பூர், புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையிடம் (ஐஎம்டி) சமர்ப்பித்துள்ளோம். இந்த சோதனைக்கு சுமார் ரூ.3.21 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.

டெல்லி காற்று மாசு

மேக விதைப்பு என்றால் என்ன?

மேகங்கள் சிறிய நீர்த்துளிகள் அல்லது பனி படிகங்களால் ஆனவை. எனவே, செயற்கை மழை என அழைக்கப்படும் மேக விதைப்பு, மேகங்களிலிருந்து மழைப்பொழிவை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வானிலை மாற்ற நுட்பமாகும்.

இதன் மூலம் மேகத் துளிகள் உருவாகி பெரிதாக வளர ஊக்குவிக்கும் சில பொருள்களை, விமானங்கள் மூலமாக காற்றில் தூவுவார்கள். இறுதியில் அது மழைப்பொழிவாக மாறும். இந்த மேக விதைப்பு பூமியிலிருந்து ஜெனரேட்டர்கள் மூலமும், ராக்கெட் போன்ற ஏவுதளங்கள் மூலமும் செயல்படுத்த முடியும்.

டெல்லி காற்று மாசு

மேக விதைப்பு வேலை செய்யுமா?

இதுபோன்ற செயற்கை மழையால் காற்றின் தரத்தில் முன்னேற்றம் சில மணிநேரங்கள் முதல் சில நாள்கள் வரை மட்டுமே நீடிக்கும். அதே நேரம் இது மாசுபாட்டின் மூலங்களை (உதாரணமாக வாகனங்கள், தொழிற்சாலைகள், தீப் புகை போன்றவற்றின் மாசுபாடுகளை) அகற்றுவதில்லை என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பெரும்பாலும் இந்த செயற்கை மழை திட்டத்தை புகைமூட்டமாக இருக்கும் சூழல்களில் மட்டும் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala: `கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடக்கம்' - மருத்துவர் குற்றச்சாட்டு; அரசின் பதில் என்ன?

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் செய்யமுடியாமல் முடங்கி உள்ளதாக சிறுநீரகத்துறை தலைமை மருத்துவர் குற்றம் சாட்ட... மேலும் பார்க்க

கீழடி: ``2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள்..'' - வடிவமைத்த இங்கிலாந்து பல்கலைக்கழகம்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கைகளை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினா... மேலும் பார்க்க

`நீங்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்...' - தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக 'கலைஞர் மகளின் உரிமைத் தொகை திட்டம்' 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள பெண்களுக்க... மேலும் பார்க்க

`RAW' உளவு அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்; `ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்'

இந்தியாவின் 'Secretary of the Research and Analysis Wing' என்றழைக்கப்படும் 'RAW' உளவு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் இந்த மாதம் ஜூலை 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதைய... மேலும் பார்க்க

``விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?'' - பாமக அன்புமணி கேள்வி!

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்ற... மேலும் பார்க்க

`பாதிக்கப்பட்ட பெண்ணும் மகள்தான்; என் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்' -குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில்... மேலும் பார்க்க