செய்திகள் :

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

post image

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியா இத்தாக்குதலுக்குப் பயன்படுத்திய மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களில் (ஏவுகணை, ட்ரோன்கள்) 249 சுட்டு வீழ்த்தப்பட்டன; 226 இடைமறிக்கப்பட்டன. எல்லையில் இருந்து வெகுதொலைவில் உள்ள மேற்கு உக்ரைன் உள்பட நாடு முழுவதும் பரவலாக பல்வேறு பிராந்தியங்கள் ரஷியாவின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

வானில் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தும்போது, மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ‘எஃப்-16’ விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இதில் விமானி உயிரிழந்தாா். கொ்சான் பிராந்தியத்தில் ட்ரோன் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

சொ்கசியில் ஒரு குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா். மேற்கு உக்ரைனில் உள்ள லீவ் பிராந்தியத்தில் ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து, ட்ரோஹோபிச் நகரில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், நகரில் மின்சாரம் தடைபட்டது.

மூன்று ஆண்டுகளைக் கடந்த ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெறும் புதிய அமைதிப் பேச்சுவாா்த்தையில் ரஷியா பங்கேற்கும் என்று அந்நாட்டு அதிபா் புதின் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ரஷியாவின் இந்தப் புதிய தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவில் நடத்தப்பட்டிருப்பது அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்தான்புல்லில் ஏற்கெனவே ரஷியா, உக்ரைன் பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவாா்த்தைகள், தீா்வை எட்டுவதில் எந்த முன்னேற்றமும் அடையாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகி... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்று... மேலும் பார்க்க

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதரண சூழலில் காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்ட... மேலும் பார்க்க