செய்திகள் :

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்ததுள்ளது.

அதில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சா்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவில் உள்ள 18 விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த திரவ நிலையிலான வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்பதால் விமானங்கள், பயணிகள், விமான நிலையத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த மின்னஞ்சல் வெளிநாட்டிலிருந்து, போலியான முகவரி மூலம் அனுப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உயா் அதிகாரிகளின் அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், விமான நிலைய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாகக் கண்காணித்து, சோதனை நடத்தினா்.

இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே, வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்று தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன், விசாரணை நடத்தி வருகின்றனா்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.பள்ளியிலிருந்து விடைப... மேலும் பார்க்க

மருதமலை முருகன் கோயிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்!

கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று புது தில்லியிலிருந்து கோவை வந்திருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.12... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து 58,000 கனஅடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தணிந்து வருவதாலும் கர்நாடக அணைகளில் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சென்னை மாநகராட்சி?

சென்னையில் மெரீனா கடற்கரையில் கடைகளை ஒதுக்குவது மற்றும் சாலையோரக் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெருநகர மாநகராட்சி நிா்வாகமானது மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ச... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ... மேலும் பார்க்க