செய்திகள் :

2-வது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; இங்கிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 290 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி நார்த்தாம்டனில் இன்று (ஜூன் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

சூர்யவன்ஷி அசத்தல்; 291 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியுடன் விஹான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடியதைப் போன்று, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

நிதானமாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். ராகுல் குமார் (47 ரன்கள்), கனிஷ்க் சௌகான் (45 ரன்கள்), அபிக்யான் குண்டு (32 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஏஎம் பிரெஞ்ச் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜாக் ஹோம் மற்றும் அலெக்ஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Batting first, India scored 290 runs in the second Under-19 ODI against England.

இதையும் படிக்க: யு-19 முதல் ஒருநாள் போட்டி: வைபவ் சூர்யவன்ஷி அதிரடி; இந்தியா அபார வெற்றி!

‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் கோரினார் தோனி!

கிரிக்கெட் வீரர் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரினார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் ‘கேப்டன் கூல்’ என்றே அழைத்... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து; ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க

பயிற்சியில் ஈடுபடாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈடுபடவில்லை.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ... மேலும் பார்க்க

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வ... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப... மேலும் பார்க்க

உதவிப் பயிற்சியாளரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் க... மேலும் பார்க்க