செய்திகள் :

பயிற்சியில் ஈடுபடாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

post image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈடுபடவில்லை.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.

2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

நாளை மறுநாள் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியில் ஈடுபடாதது இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்று (ஜூன் 30) இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவில்லை. அவர் நாளை மீண்டும் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், அண்மையில் அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சராசரியாக இருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

England fast bowler Jofra Archer has not been involved in training for the second Test against India

இதையும் படிக்க: 2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?

2-வது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; இங்கிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 290 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஒர... மேலும் பார்க்க

‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் கோரினார் தோனி!

கிரிக்கெட் வீரர் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரினார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் ‘கேப்டன் கூல்’ என்றே அழைத்... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து; ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்

இந்திய அணியிடம் வித்தியாசமான பந்துவீச்சு வரிசை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வ... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா? முன்னாள் இங்கிலாந்து வீரரின் அறிவுரைகள் உதவுமா?

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப... மேலும் பார்க்க

உதவிப் பயிற்சியாளரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அஸார் மஹ்முத், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் க... மேலும் பார்க்க