செய்திகள் :

தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர் காயம்!

post image

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராம் தொழில்துறைப் பகுதியில், வேதிப் பொருட்கள் தொழிற்சாலை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிகாச்சி கெமிக்கல்ஸ் எனும் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் சுற்றியிருந்த பகுதிகள் முழுவதும் நெருப்பு சூழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவசர மீட்புக் குழுக்கள் தொழிற்சாலைக்கு விரைந்துள்ளனர்.

திடீரென வெடிப்பு நிகழ்ந்ததால் தொழிலாளர்கள் எந்தவித உயிர்காப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தீயணைப்புப் பணியாளர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஹைட்ரா கிரேன்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

வெடிப்பு நடந்தபோது 150 பேர் அங்கு இருந்துள்ளனர். அவர்களில் 90 பேர் வெடிப்பு நடந்த ஆலையில் இருந்துள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் இருந்து பரவிய நெருப்பை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார். சிக்கியிருக்க்கும் தொழிலாளிகளை மீட்கவும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவுறுத்தியிருக்கிறார்.

`லாக் அப் மரணங்களில் தென் மாநில அளவில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது' - ஆர்.பி.உதயகுமார்

"தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை, காட்டுமிராண்டி ஆட்சியா?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார்.திருப்புவனம் லாக்கப் டெத் - உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்இது தொடர்பாக அவர் வெ... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் டெத்: "மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல்" - நயினாரின் 9 கேள்விகள்

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர... மேலும் பார்க்க

"தண்டனையை விரைவாகப் பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர... மேலும் பார்க்க

PMK: "அன்புமணி தான் எதிர்காலம், ஆனால்..." - பாமக MLA அருள் சொல்வதென்ன?

பாமக கட்சியில் நடைபெற்றுவரும் தந்தை மகன் பூசலுக்கு மத்தியில் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றிய நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு மாநில ... மேலும் பார்க்க

ADMK : 'கூட்டணி ஆட்சி; கறாராக 'நோ' சொல்லும் எடப்பாடி! - பின்வாங்குமா பா.ஜ.க?

'கூட்டணி ஆட்சி சர்ச்சை!'அதிமுக - பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சென்னையின் முன்னாள் மேயர் சிலை! - கவனிக்குமா மாநகராட்சி?

நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர், இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருடன் பயணித்து அரசியல் செய்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என ஏகப்ப... மேலும் பார்க்க