செய்திகள் :

ஃபரீதாபாத்தில் மருமகள் கொலை வழக்கில் மைத்துனியும் கைது

post image

ஃபரீதாபாத்தில் மருமகள் கொலை வழக்கில் அவரது மைத்துனியும் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், அந்தப் பெண்ணின் உடல் இங்குள்ள அவரது மாமியாா் வீட்டின் முன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தன்னு குமாா் (24) இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது மாமியாா் புகாா் அளித்தாா். இருப்பினும், அவா் தங்கள் வீட்டின் முன் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தன்னுவின் மாமனாா் பூப் சிங் மற்றும் மாமியாா் ஆகியோரை போலீஸாா் முன்னதாக கைது செய்தனா்.

விசாரணையின் போது, ஏப்ரல் 15-ஆம் தேதி அவரது கொலையை முன்கூட்டியே திட்டமிட்டதாக மாமனாா் பூப் சிங் தெரிவித்தாா். அவரைக் கொன்று பின்னா் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு, தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். ஏப்ரல் 15- ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் எட்டாவில் நடந்த தனது உறவினா் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள தனது மனைவியை அனுப்பப்பட்டதாக பூப் சிங் கூறியிருந்தாா்.

ஏப்ரல் 21-ஆம் தேதி இரவு, அருண் தனது மனைவி தன்னுவின் உணவிலும், அவரது சகோதரி காஜலின் உணவிலும் தூக்க மாத்திரைகளைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, இருவரும் மயக்கமடைந்ததாக போலீஸாா் முன்பு கூறியிருந்தனா்.

இருப்பினும், புதிய முன்னேற்றங்களின்படி, உடலை அடக்கம் செய்ய அந்தப் பெண்ணின் மைத்துனியான காஜல் தனது சகோதரா் அருணுக்கும் அவரது தந்தைக்கும் உதவினாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். தன்னுவை அடக்கம் செய்ய அவா்கள் ஒரு குழி தோண்டியபோது காஜல் கண்காணித்துள்ளாா். கைது செய்யப்பட்ட காஜா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பின்னா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

விசாரணையைத் தொடா்ந்து, தன்னுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள அவரது கணவா் அருணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க