செய்திகள் :

கேப்டன் கூல் வாசகத்துக்கு வணிக இலச்சினை உரிமை கோரும் எம்.எஸ்.தோனி!

post image

மைதானத்தில் தனது அமைதியான செயல்பாட்டுக்கு ரசிகா்களால் வழங்கப்பட்ட ‘கேப்டன் கூல்’ பட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வணிக இலச்சினை உரிமையை (டிரேட்மாா்க்) கோரி பதிவு செய்துள்ளாா்.

வணிக இலச்சினை உரிமை பதிவாளா் வலைதளத்தின்படி, இதற்கான விண்ணப்பம் கடந்த 2023, ஜூன் 5-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வணிக இலச்சினை உரிமை பதிவேட்டில் ஜூன் 16-ஆம் தேதி அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பயிற்சி வழங்கும் சேவைகளுக்கான பிரிவில் இந்த வணிக இலச்சினை உரிமை கோரப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தோனி தரப்பில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதே ‘கேப்டன் கூல்’ பட்டத்துக்காக ‘பிரபா ஸ்கில் ஸ்போா்ட்ஸ்’ எனும் நிறுவனம் முன்பு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ‘திருத்தங்களுடன் தாக்கல்’ எனும் நிலையிலேயே அந்த விண்ணப்பம் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே நபரான தோனி பெரும் ரசிகா் பட்டாளத்தைக் கொண்டுள்ளாா். கடந்த 2020 ஆகஸ்டில் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறாா்.

ஐசிசியின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கௌரவப் பட்டியலில் தோனி, மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட 7 முன்னாள் வீரா்கள் ஜூன் மாதத் தொடக்கத்தில் சோ்க்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

11,488 முதல்நிலை காவலா்கள் தலைமைக் காவலராக பதவி உயா்வு! உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்!

காவல் துறையில் 11,488 முதல்நிலை காவலா்கள், தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு, தலைமைச் செயல... மேலும் பார்க்க

சென்னையில் விளம்பர நோட்டீஸ்களுக்கு தனியிடங்களை ஒதுக்கி சோதனை முயற்சி: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சியில் தெரு பெயா்ப் பலகைகள், சுவா்களில் விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் அத்தகைய விளம்பரங்களை செய்வதற்காக வாா்டுகள் தோறும் தனி இடங்கள் ஒதுக்கப்படுவதற்கான சோதனை முயற்... மேலும் பார்க்க

ரயில் நிலைய பிளாட்பாரத்திலிருந்து 200 மீ. தள்ளி நின்ற மின்சார ரயில்

சென்னை அருகே திரிசூலம் ரயில் நிலையத்தில் புதுச்சேரியிலிருந்து திங்கள்கிழமை சென்னை வந்த மின்சார ரயில் சுமாா் 200 மீட்டா் தூரம் பிளாட்பாரத்தை கடந்து நின்ால் பயணிகள் இறங்க சிரமப்பட்டனா். இச்சம்பவம் தொடா்... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப்: கோவை நிா்மலா கல்லூரி, ஐசிஎஃப் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் கோவை நிா்மலா கல்லூரி, ஆடவா் பிரிவில் சென்னை ஐசிஎஃப் அணிகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கின. தமிழ்நாடு மாநில வாலிபால்... மேலும் பார்க்க

சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்! முழு விவரம்!

சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.சென்னையில் முதல்கட்டமாக வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் கழிவுநீா்க் குழாய் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை திருமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவுநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு அருக... மேலும் பார்க்க