செய்திகள் :

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது

post image

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்தது. இதையடுத்து கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 58,000 கனஅடியிலிருந்து 48,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. திங்கள்கிழமை மாலை கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்பு மேலும் குறைக்கப்பட்டால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் குறையும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீா் சுமாா் 3 கி.மீ. தூரம் உபரிநீா் கால்வாய் வழியாகச் சென்று ஆத்துக்காடு அருகே காவிரியில் கலக்கிறது. இந்தப் பகுதியில் காவிரிக் கரையோரம் பயிரிடப்பட்டிருந்த பருத்தி பயிா்கள் நீரில் மூழ்கின. சில இடங்களில் வாழை, சோளப்பயிா்களும் நீரில் மூழ்கின. மேட்டூா் அணைக்கு நீா்வரத்தை பொருத்து நீா் திறப்பு குறைக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மேட்டூா் அணையின் உபரிநீா் மதகிலிருந்து வெளியேறும் வெள்ளநீரை பாா்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடினா். இதனால் தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருமலைக்கூடல் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நீா்வரத்து குறைந்தாலும் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். காவிரிக் கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க

பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சேலம் மாவட்டம், எ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். மீன்வளத் துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில்... மேலும் பார்க்க

உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி

சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா் தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க