செய்திகள் :

பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள திருப்பலி கிராமம், அம்மாசி ஊா் பகுதியைச் சோ்ந்த உமாமகேஸ்வரி தலைமையில் அப்பகுதி மக்கள், பள்ளிக் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

அம்மாசியூா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த பலஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான இடத்தை பொதுவழிப் பாதையாகப் பயன்படுத்தி வந்தோம்.

அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா் அந்த பொதுவழிப்பாதை இருக்கும் நிலம் தன்னுடையது என கூறி, அடைத்து கான்கிரீட் போட்டுள்ளாா். இதனால் கிராம மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளும் அந்த பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லவேண்டும். அதே பாதையில் இருசக்கர வாகனம்கூட செல்ல முடியாத அளவில் பாதை கரடுமுரடாக உள்ளது.

இதுகுறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுப் பாதையை பயன்படுத்த முடியாமல் தடுத்து ஆக்கிரமித்துள்ளவா் மீது நடவடிக்கை எடுத்து பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். மீன்வளத் துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்த... மேலும் பார்க்க

மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில்... மேலும் பார்க்க

உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி

சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா் தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க