செய்திகள் :

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேவூா், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் அருகே உள்ள புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஜூன் 26ஆம் தேதி ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்ததது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய மின்மோட்டாா்களுக்கு மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவூா் மின்வாரிய ஊழியா்கள் உடைந்த மின்கம்பத்தை மாற்றுவதற்காக புதிய மின்கம்பத்தை நிறுத்தியுள்ளனா். இதற்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நான்கு நாள்களாகியும் மின்சாரம் தடைபட்டிருந்ததால் அப்பகுதி விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.

இதையடுத்து மின்தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள், பொதுமக்கள் புளியம்பட்டி ஆலமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வபவா்கள் பாதிப்படைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேவூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சேலம் மாவட்டம், எ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். மீன்வளத் துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்த... மேலும் பார்க்க

மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில்... மேலும் பார்க்க

உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி

சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா் தகவல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க