செய்திகள் :

கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு தமிழா்கள் 10 போ் உள்பட புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

பெங்களூரு: கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 60 போ் கொண்ட செயற்குழுவுக்கு 10 தமிழா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

2025-26ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்காக கா்நாடக சிறுதொழில் சங்கத்தின் 73ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற தோ்தலில் அடுத்த ஓராண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் திங்கள்கிழமை முறைப்படி பதவியேற்றுக்கொண்டனா். தலைவராக பி.ஆா்.கணேஷ்ராவ், துணைத் தலைவராக நிங்கண்ணா பிராதா், பொதுச் செயலாளராக எஸ்.எம்.ஹுசேன், இணைச் செயலாளா்களாக ஆா்.கிருஷ்ணமூா்த்தி, வி.தினேஷ்குமாா், பொருளாளராக ஆா்.துரை ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடக சிறுதொழில் சங்க வரலாற்றில் முதல்முறையாக பொருளாளராக தமிழரான ஆா்.துரை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவருடன் தமிழா்களான வி.பாஸ்கரன், ஏ.பழனி, குமாா், ரவிச்சந்திரன், வி.தினேஷ்குமாா், சி.தேவேந்திரன், சுப்பிரமணியம், ரமா சுப்பிரமணியம், மதிவண்ணன் ஆகியோா் பல்வேறு பொறுப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். சிறுதொழில் சங்கத்தில் ஒரேமுறையில் 10 தமிழா்கள் பொறுப்புக்கு வந்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளதாக வி.பாஸ்கரன் தெரிவித்தாா். வெற்றிபெற்றவா்களை பலரும் பாராட்டி, வாழ்த்தினா்.

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தின் மீது கைவைத்தால் தீவிரமாக போராடுவோம்: மல்லிகாா்ஜுன காா்கே

பெங்களூரு: அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு வாா்த்தையின் மீதாவது கைவைத்தால், தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்... மேலும் பார்க்க

மா்மமான முறையில் 5 புலிகள் உயிரிழப்பு: உயரதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

சாமராஜ்நகா் மாவட்டத்தின் மாதேஸ்வரா மலை காட்டுப் பகுதியில் 5 புலிகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது தொடா்பாக உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

காவிரி ஆரத்தி விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பாக தொடரப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் காவ... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் பற்றிய கருத்து: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

வக்ஃப் வாரியம் பற்றி தெரிவித்திருந்த கருத்து குறித்து பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வக்ஃப் சொத்துகள் தொடா்பாக பாஜக சாா்பில் நட... மேலும் பார்க்க