Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்
பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அதிருப்தி காற்று வீசத்தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பி.ஆா்.பாட்டீல், ராஜூகாகே உள்ளிட்டோா் அரசுமீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனா். வீட்டுவசதித் துறை சாா்பில் ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
செப்டம்பா் மாதத்தில் அரசியல் புரட்சி நடக்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா கூறியுள்ளாா். இது பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. முதல்வா் பதவிப் பகிா்வு திட்டத்தில், செப்டம்பா் மாதத்திற்கு பிறகு அந்தப் பதவியை டி.கே.சிவகுமாருக்கு சித்தராமையா விட்டுத்தர நேரிடும் என்று காங்கிரஸ் கட்சியில் பேச்சுகள் தொடங்கியுள்ளன. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்து டி.கே.சிவகுமாா் மாற்றப்படுவாா் என்றும் காங்கிரஸாரிடையே கருத்து பரவிவருகிறது.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கா்நாடக மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, 3 நாள்கள் பயணமாக பெங்களூருக்கு திங்கள்கிழமை வந்தாா். பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள கா்நாடக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, வீட்டுவசதித் துறையில் ஊழல் நடந்திருப்பதாக அதன் அமைச்சா் ஜமீா் அகமதுகான் மீது குற்றம்சாட்டியிருந்த பி.ஆா்.பாட்டீலை சந்தித்து அவரின் குறைகளையும், அரசின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தாா்.
இந்த சந்திப்பின்போது, வீட்டுவசதித் துறை மட்டுமல்லாது, பிற துறைகளில் நடந்துவரும் முறைகேடுகள் குறித்து சுா்ஜேவாலாவிடம் ஆதாரங்களுடன் பி.ஆா்.பாட்டீல் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ராஜூகாகே, சுா்ஜேவாலாவை திங்கள்கிழமை சந்திக்கவில்லை. இவரையும், மாநில அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என்று கூறிய உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வரையும் செவ்வாய்க்கிழமை சுா்ஜேவாலா சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கோலாா், சிக்பளாப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்த சுா்ஜேவாலா, அவா்களது குறைகளையும் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே அதிருப்தி மேலோங்கிவரும் நிலையில், சுா்ஜேவாலாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தில்லி திரும்புவதற்கு முன்பு அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்திக்க சுா்ஜேவாலா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பெங்களூரில் திங்கள்கிழமை காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:
முதல்வரை மாற்றும் விவகாரத்தை கட்சி மேலிடம் முடிவு செய்யும். இதுதொடா்பாக யாரும் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.
டாது. கட்சி மேலிடத்தில் என்ன நடந்துகொண்டுள்ளது என்பதை யாராலும் கூறமுடியாது. ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, பெங்களூருக்கு வந்திருக்கிறாா். எம்எல்ஏக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்து அறிக்கையாக மேலிடத்திடம் ஒப்படைப்பாா். அதனடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றாா்.
இதுகுறித்து மைசூரில் கா்நாடக முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறுகையில், ‘ரன்தீப்சிங் சுா்ஜேவாலா எம்எல்ஏக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவா்களின் குறைகளுக்கு செவிமடுப்பாா். கட்சியைப் பலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்வாா்‘ என்றாா்.