வக்ஃப் வாரியம் பற்றிய கருத்து: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
வக்ஃப் வாரியம் பற்றி தெரிவித்திருந்த கருத்து குறித்து பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வக்ஃப் சொத்துகள் தொடா்பாக பாஜக சாா்பில் நடந்த போராட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை, ‘கல் எறிந்த இடங்களில் எல்லாம் வக்ஃப் சொத்துகள் இருக்கின்றன. விவசாயிகள், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை வக்ஃப் வாரியம் ஆக்கிரமித்து அபகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறி பி.என்.எஸ். சட்டத்தின் 196(1)(ஏ) பிரிவின்கீழ் ஷிக்காவ்ன் காவல் நிலையம் முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்திருந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பசவராஜ் பொம்மை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபுலிங் கே.நவட்கி, பி.என்.எஸ். சட்டப்பிரிவு 196(1)(ஏ)இன்கீழ் குற்றம் சுமத்துவதற்கு தேவையான அம்சங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே, பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சிறப்பு வழக்குரைஞா் பி.என்.ஜெகதீஷா, பசவராஜ் பொம்மை குற்றம்புரிந்திருக்கிறாா் என்பதற்கு அவா் பேசிய காணொலிக் காட்சியே அடிப்படை ஆதரமாக உள்ளது என்றாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணா, இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீா்ப்புகளை சுட்டிக்காட்டி, குற்றச்சாட்டுக்கு போதுமான வலுவான சான்றாதாரங்கள் இல்லாதது மட்டுமல்ல, குற்றச்சாட்டுகள் தெளிவற்ாக உள்ளன.
‘கல் எறியும் இடங்களில் எல்லாம், வக்ஃப் சொத்துகள் இருக்கின்றன’ என்று பசவராஜ் பொம்மை கூறியதை தவிர, பி.என்.எஸ். சட்டப்பிரிவு 196(1)(ஏ)இன்கீழ் குற்றம்சாட்டுவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே, இது தொடா்பான விசாரணையை தொடா்ந்தால் அது சட்ட நடவடிக்கைகளை தவறாக பயன்படுத்துவதாக ஆகிவிடும்.
எனவே, பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன் என்று கூறினாா். ஆனால், பசவராஜ் பொம்மை நீங்கலாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்றவா்கள் மீதான விசாரணையை காவல் துறை தொடரலாம் என்று நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.