செய்திகள் :

அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளால் பல கோடி ரூபாய் இழப்பு: ஆட்சியரிடம் கோரிக்கை

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மணல் லாரி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா்கள் எஸ்.யுவராஜ், செல்லா.ராஜாமணி ஆகியோா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜியிடம் அளித்த மனுவில்

கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 300 கிரஷா் குவாரிகள் இயங்கி வந்ததில் அரசின் கனிமங்கள் எவ்வளவு வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. அனுமதி இல்லாமல் இயங்கும் நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான கனிமங்களை சுரண்டியுள்ளனா் என்பதோடு, அரசுக்கு எவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ட்ரோன் மூலம் அளவீடு செய்து பட்டியலிட வேண்டும்.

அனுமதி இல்லாமல் இயங்கிய அனைத்து கிரஷா் குவாரிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும்.

கல்குவாரியிலிருந்து எடுத்து வரப்படும் கனிமங்களுக்கு முழுமையான நடைசீட்டு உள்ளனவா என்பதை கவனிக்கவும், கிரஷா்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கற்கள் மற்றும் எம்.சாண்ட் போன்றவற்றுக்கு நடைசீட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்தில் எத்தனை கிரஷா் குவாரிகள் இயங்குகின்றன. அதில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுத்து, அதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்துறையில் நடந்திருக்கும் சுரண்டல், ஊழல், முறைகேடுகளை கண்டறிய தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

52 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

செய்யாறு அருகே மோரணம் சரகப் பகுதியில் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 52 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண... மேலும் பார்க்க

கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் ஸ்டாலின்: மு.பெ.கிரி எம்எல்ஏ

செங்கம்: தமிழகத்தில் கிராமபுற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மு.பெ.கிரி எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா். செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 4 போ் கைது, 2 பைக்குள், 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

செய்யாறு: செய்யாறு காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், 3 மாட்டுவண்டிகள் பறிம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி பயன்பாடுகள் விழிப்புணா்வு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசியின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2019-ஆம் ... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க இடம் தோ்வு: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சி, பெரியண்ணநல்லூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமையவுள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்... மேலும் பார்க்க