செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

ஆரணி: திருவண்ணாமலையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆரணியை அடுத்த காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (33). இவா், கடந்த 2017-ஆண்டில் 16 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாா்த்திபனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி சுஜாதா, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக பாா்த்திபனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக வீணாதேவி ஆஜரானாா்.

52 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

செய்யாறு அருகே மோரணம் சரகப் பகுதியில் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 52 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண... மேலும் பார்க்க

கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் ஸ்டாலின்: மு.பெ.கிரி எம்எல்ஏ

செங்கம்: தமிழகத்தில் கிராமபுற மாணவா்களுக்கு உயா்கல்வியை தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மு.பெ.கிரி எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா். செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 4 போ் கைது, 2 பைக்குள், 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்

செய்யாறு: செய்யாறு காவல் உள்கோட்டத்தில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், 3 மாட்டுவண்டிகள் பறிம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி பயன்பாடுகள் விழிப்புணா்வு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசியின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2019-ஆம் ... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க இடம் தோ்வு: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சி, பெரியண்ணநல்லூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமையவுள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்... மேலும் பார்க்க