செய்திகள் :

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

post image

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.

வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்ட வெளியே வருவது கூட அபூர்வம் என்றும், அண்டை வீட்டினர் வற்புறுத்திய பிறகே குப்பைகளைக் கூட வெளியே கொட்டுவார் எனவும் அண்டை வீட்டினர் குறிப்பிடுகின்றனர்.

நவி மும்பையின் கார்குல் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 55 வயதுடைய தொழில்நுட்பத் துறை ஊழியர் ஒருவர் பூட்டிய வீட்டிலேயே இருந்துள்ளார்.

அனுப் குமார் நாயர் என்ற பெயருடைய இவர், தன்னார்வலர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், அன்பின் சுவிஷேச சங்க ஆசிரமத்தின் உதவியுடன் பூட்டிய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

3 ஆண்டுகளாக முடி வெட்டாமல், சவரம் செய்யாமல் உடல் நிலையும் மோசமாகி மீட்கப்பட்டுள்ளார். அவரின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்ட ஆசிரமம் தெரிவித்துள்ளது.

அனுப் குமாரின் தாயார் பொன்னம்மா நாயர், இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். இவரின் தந்தை குட்டி கிருஷ்ணன் நாயர், டாடா மருத்துவமனையில் பணிபுரிந்தவர். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், கடும் மன உளைச்சலில் சிக்கியுள்ளார் அனுப் குமார்.

உறவினர்கள், நண்பர்கள் மீது நம்பிக்கை இழந்த அவர், பூட்டிய அறையில் தனிமையில் கடந்த 3 ஆண்டுகளைக் கழித்துவந்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஆசிரமத்தின் ஊழியர் ஒருவர், ''அனுப் குமார் நாற்காலியில் அமர்ந்து உறங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரின் வீட்டில் இருந்த மரச்சாமன்களை யாரோ எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. நாற்காலியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உடனடி சிகிச்சைத் தேவைப்படும் அளவுக்கு அவரின் காலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் இறந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் பலர் அனுப் குமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அனுப் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. மற்றவர்கள் மீது நம்பிக்கை இழந்தவராக அவர் உள்ளார். தற்போது அவர் ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க |மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

A tech worker in Mumbai has been living in a locked room for 3 years.

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந... மேலும் பார்க்க

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும்... மேலும் பார்க்க

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலையில் வெடி விபத்து: 12 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் மருந்... மேலும் பார்க்க