செய்திகள் :

உடையாத ஸ்மார்ட்போன் உண்டா? அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 9 சி!

post image

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை யுக்தி பலரைக் கவர்ந்துள்ளது. அதாவது, 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் 9 சி என்ற புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 12 - 14 தேதிகளில் வெளியாகும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விளம்பரத்தை பிரபல இணைய விற்பனை தளமான அமேசானிலும் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெரும்பாலும் விற்பனைக்கான யுக்தியாக அதன் சிறப்பம்சங்களை முன்னிலைப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன், மற்ற ஸ்மார்ட்போன்களின் உறுதித்தன்மைக்கு சவால்விடும் வகையில் 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறி விழுந்தாலும் உடையாது என்ற அம்சத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது.

சிறப்பம்சங்கள்

  • ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போனில், டிராப் டெக்னாலஜி 2.0 என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உறுதித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் தூரத்தில் இருந்து விழுந்தாலும் உடைவதற்கான வாய்ப்பு 166% குறைவு என உறுதியளித்துள்ளது.

  • தட்டையான டைட்டானியம் உலோகத்தாலான புறவடிவமைப்பு உடையது

  • 6600 mAh பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 39% பேட்டரி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • 28.8 மணி நேரம் தொடர்ந்து விடியோக்களை பார்க்கலாம். 48.4 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை கேட்கலாம்.

  • திரையின் வெளிச்சம் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் ஐ கம்ஃபோர்ட் டிஸ்பிளே அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4000nits அம்சம் கொண்டது.

  • 108MP ஐஓஎஸ் மோஷன் சென்சார் பொருத்தப்பட்ட கேமராக்கள் உடையது. இதனால், விடியோக்களை எந்தவித தடுமாற்றமுமின்றி பதிவு செய்ய முடியும்.

  • 360 டிகிரியிலும் நீர்புகாத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

  • மேல் - கீழ்புறம் என இரண்டு ஸ்பீக்கர்கள் உடையது.

இதையும் படிக்க | உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்

The HONORX9c5G features SGS 5-Star Drop Resistance even up to 2 meters with tough design and global trust

ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை வென்ற கேபிஐஎல்!

புதுதில்லி: கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் வென்றுள்ளதாக இன்று தெரிவித்தது.இந்தப் புதிய ஆர்டர்களுடன், நி... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 9 மாதம் இல்லாத அளவுக்கு சரிவு!

புதுதில்லி: இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் ஒன்பது மாதங்களில்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.85.73 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் குறைந்து 85.73 ஆக முடிவடைந்தது. இதற்கு பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உ... மேலும் பார்க்க

4 நாள் ஏற்றத்திற்கு பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தொடர்ந்து நான்கு நாள் ஏற்றத்திற்குப் பிறகு, முக்கியமாக வங்கிப் பங்குகளில் லாபம் ஈட்டுதல் அதிகரிப்பால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து ... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்

முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 8ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ளது. நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக சந்தைகளுக... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பு! ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு

சரக்கு மற்றும் சேவை வரியின்(ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியான மத்திய அரசு தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில... மேலும் பார்க்க