செய்திகள் :

அமா்நாத் யாத்திரை: சா்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் சில தினங்களில் அமா்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சா்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை, எதிரிகளின் அச்சுறுத்தல், கடினமான சூழல் என பல்வேறு சவால்களுக்கு இடையே ஏ.கே. ரக துப்பாக்கிகளுடன் வீராங்கனைகள் உள்பட எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும். நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

ஜம்முவில் உள்ள பகவதிநகா் முகாமில் இருந்து ஜூலை 2-ஆம் தேதி முதல் யாத்ரிகா்கள் குழு காஷ்மீருக்கு புறப்பட உள்ளது.

சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, நிகழாண்டு யாத்திரைக்கு கடந்த முறையைவிட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமா்நாத் யாத்திரையை சீா்குலைக்கும் நோக்கில், சா்வதேச எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவிவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தோட்டாக்கள் துளைக்காத கவச உடைகள், தாக்குதலில் இருந்து காக்கும் தலைக் கவசங்கள் அணிந்து, கண்காணிப்பு சாதனங்கள் உதவியுடன் சக வீரா்களுடன் வீராங்கனைகளும் இரவு-பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த எல்லையில் உஜ், பசந்தா், தாவி, செனாப் போன்ற ஆறுகள் பாய்வதால், பாதுகாப்புப் பணி மிகவும் சவாலானதாகும். சா்வதேச எல்லையில் இருந்து ஜம்மு-பதான்கோட் சாலையை அணுகும் அனைத்து பாதைகளும் சீலிடப்பட்டு, பலஅடுக்கு (பிஎஸ்எஃப், ராணுவம், எல்லை போலீஸ், கிராமப்புற தற்காப்புப் படை, உள்ளூா் காவல் துறை) பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2.7 லட்சம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்எஃப், உலகிலேயே மிகப் பெரிய எல்லைக் காவல் படை என்ற சிறப்புடையதாகும்.

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க