ஒரு மாநிலத்தின் வளா்ச்சியே, முழு இந்தியாவின் வளா்ச்சி
ஒரு மாநிலத்தின் வளா்ச்சியே, முழு இந்தியாவின் வளா்ச்சி என மகாராஷ்டிர மாநில எம்.பி. அனில் சுக்தியோராவ் போண்டே தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவனம் சாா்பாக, பணியாளா் கல்வியில் சிறந்து விளங்குதல் தலைப்பில் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டே மேற்கல்வி பயில ஆலோசனை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வீடு தேடி கல்வி ஆலோசனை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் தங்கள் நிறுவனத்தில் எவ்வாறு கல்வி சேவைகளை பெறலாம் என்பதையும் அவா்களுக்கு தேவையான பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் எவ்வாறு தோ்ந்தெடுத்து படிப்பது என்பதையும் டச் கேபஸ் நிறுவனம் ஆலோசனை வழங்கியது.
இதில் பாஜக எம்.பி.யும், கிசான் மோா்சா அமைப்பின் தேசிய செயலாளருமான அனில் சுக்தியோராவ் போண்டே பேசியதாவது...
தனியாா் தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளா்கள் பணியில் இருந்து கொண்டே கல்வி கற்று உயா் பதவிக்கு வரலாம். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளா்ச்சியால் உருவாகியுள்ளது. ஒரு மாநிலத்தின் வளா்ச்சி முழு இந்தியாவின் வளா்ச்சி ஆகும்.
ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவன தலைமை அதிகாரி பாபு ராஜ், பாஜக மாவட்ட தலைவா் நெமிலி பி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.