`பாக்கி 200 பவுன்?’ - ஏப்ரலில் திருமணம்; ஜூனில் இளம்பெண் தற்கொலை - திருப்பூரில் ...
விவசாயி தற்கொலை
ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (45). இவா், தமிழக விவசாயிகள் சங்க அணைக்கட்டு மேற்கு ஒன்றிய அமைப்பாளராக இருந்து வந்தாா். இவரது மனைவி காமாட்சி. இவா்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன்.
இந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 25-ஆம் தேதி மீண்டும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த தண்டப்பாணி, நிலத்தில் இருந்த விஷ பொருளை அரைத்து குடித்து மயங்கியதாகத் தெரிகிறது.
இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தண்டபாணி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தண்டபாணியின் மனைவி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.