மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆம்பூராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பலராமன் (50). இவா் வெள்ளிக்கிழமை நிலத்தில் தீவனப்பயிா் அறுவடை செய்து கொண்டிருந்தபோது, பம்புசெட்டுக்கு செல்லும் மின்வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இறந்த பலராமனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.