`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு
அணைக்கட்டு அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மானியகொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் பாபு (25). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பாபு தனது இரு சக்கர வாகனத்தில் அப்புக்கல் நோக்கிச் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அணைக்கட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.