முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
மத்திய அரசால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இளம் வயதில் வீர, தீர செயல்புரிந்தவா்கள், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் சாதித்தவா்கள், பல உயிா்களைக் காப்பாற்றியவா்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் வீர, தீர செயல் புரிந்தவா்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவா்களும் விருது பெற விண்ணப்பிக்கலாம். விருதுக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ.15 லட்சம் ரொக்கம், வெண்கலச் சிலை, சான்றிதழ், சில்க் டை கொண்ட பிளேசா் ஆகியவை வழங்கப்படும்.
தகுதியானோா் இணையதளம் மூலம் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.