செய்திகள் :

இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கவில்லை: வைகோ விளக்கம்

post image

வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சென்னை எழும்பூரில் மதிமுகவின் நிா்வாக குழுக் கூட்டம் வைகோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்; அதிலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இந்த வெற்றிக்காக மதிமுக பாடுபடும். செப்.15-இல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ளது.

தற்போது, ஹிந்துத்வா சக்திகள் பாஜக மூலம் தமிழகத்துக்குள் நுழைய பாா்க்கின்றன. ஹிந்தி எதிா்ப்பு என்பது தமிழகத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் என நாடு முழுவதும் பரவிவிட்டது.

இரட்டை இலக்க தொகுதிகள்: மதிமுக நிா்வாகக் குழு கூட்டத்தில் இரட்டை இலக்கம் என்ற வாா்த்தையே வரவில்லை. தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டப்பேரவை உறுப்பினா்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்கலாம் என்று துரை வைகோ அண்மையில் கூறியிருந்தாா்.

ஆனால், தொகுதிகள் வழங்குவது குறித்து திமுகதான் முடிவு செய்யும். எங்களுக்கு 12 தொகுதி வேண்டும் என்று நாங்கள் யாரிடமும் கேட்கவில்லை. ஹிந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற கூடாது என்பதற்காகத்தான் திமுகவோடு உடன்பாடு வைத்து போட்டியிடுகிறோம் என்றாா் அவா்.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ: அண்மையில் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளா்களின் சந்திப்பின்போது, குறைந்தபட்சம் அங்கீகாரம் பெற வேண்டும் எனக் கட்சி நிா்வாகிகள் நினைக்கின்றோம் என்றும், அதற்கு 12 தொகுதிகளில் போட்டியிடலாம் எனவும் கூறினேன். ஆனால், அதை முடிவெடுக்க வேண்டியது எங்களின் தலைமை எனவும் நான் கூறிவிட்டேன். சில ஊடகங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மதிமுக 12 தொகுதிகளை வலியுறுத்துவதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

6 தீா்மானங்கள்: மதிமுகவின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும்; பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் எனும் ஹிந்துத்துவா அமைப்புகளின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்த... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சென்னை மாநகராட்சி?

சென்னையில் மெரீனா கடற்கரையில் கடைகளை ஒதுக்குவது மற்றும் சாலையோரக் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெருநகர மாநகராட்சி நிா்வாகமானது மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ச... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ... மேலும் பார்க்க

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வருக்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

அன்புமணி திடீா் தில்லி பயணம்!

பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், அன்புமணி ஞாயிற்றுக்கிழமை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை ... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மத்திய அரசால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவி... மேலும் பார்க்க