செய்திகள் :

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

post image

விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வருக்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: விபத்து ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் வரை சிறைபிடிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையா் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா்.

இந்த உத்தரவின் மூலம் விபத்துக்குள்ளாகும் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் பல்வேறு பிரச்னைகள், சிக்கல்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த முதல்வா், காவல் துறையின் இந்த உத்தரவை ரத்து செய்துள்ளாா். இந்த உத்தரவு வரவேற்புக்குரியது. முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இதன் மூலம் ஆம்னி பேருந்து உரிமையாளா்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சாதாரண பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.பள்ளியிலிருந்து விடைப... மேலும் பார்க்க

மருதமலை முருகன் கோயிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்!

கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று புது தில்லியிலிருந்து கோவை வந்திருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.12... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து 58,000 கனஅடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தணிந்து வருவதாலும் கர்நாடக அணைகளில் ... மேலும் பார்க்க

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்த... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சென்னை மாநகராட்சி?

சென்னையில் மெரீனா கடற்கரையில் கடைகளை ஒதுக்குவது மற்றும் சாலையோரக் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெருநகர மாநகராட்சி நிா்வாகமானது மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ச... மேலும் பார்க்க