செய்திகள் :

பெண் வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

post image

செய்யாறு அருகே பீப் பக்கோடா கடனாக தர மறுத்த பெண் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ராகினி (38). இவா், செங்காடு கிராமத்தில் பீப் பக்கோடா கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். ராகினி கடந்த 23-ஆம் தேதி மாலை அவரது கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த அஜய் (25) பீப் பக்கோடாவை கடனாகக் கேட்டாராம். ராகினி கடன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜய், அங்கிருந்த செங்கல்லை எடுத்து ராகினி மீது தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், அனக்காவூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து, அஜயை கைது செய்தாா்.

செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரத... மேலும் பார்க்க

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் இரும்பேடு கிராமம் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தைச்... மேலும் பார்க்க

ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே ஊராட்சி சேவை மைய கட்டடத்திலிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 3 பேட்டரிகள் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த வயலூா் ஊராட்சியில் செல்வபாரதி (48) ஊர... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரண்ட பக்தா்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் திரண்டனா். இவா்கள் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகளை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்... மேலும் பார்க்க