முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
செங்கம் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம்: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த மே 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தினமும் கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.
ஒரு மண்டலம் முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் வளாகத்தில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, சிறப்பு யாகம், சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரானை நடைபெற்றது.
மண்டலாபிஷேக விழாவில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட பெருமாள் கோயில் பத்து நாள் கருடசேவை திருவிழா குழுவினா், கும்பாபிஷேக விழா உபயதாரா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், பக்தா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.