மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
உலகளாவிய சவால்களை தீா்ப்பதில் இந்தியா இப்போது முக்கியப் பங்காளியாக மாறியுள்ளது! ஹரியாணா முதல்வா்
இந்தியா இனி உலகத்திடம் உதவி கேட்கும் நாடாக இல்லை; மாறாக உலகளாவிய சவால்களைத் தீா்ப்பதில் முக்கியப் பங்காளியாக மாறியுள்ளது என்று ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தெரிவித்தாா்.
குருகிராமில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞா் மாதிரி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவா் கூறியதாவது: பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தொடக்க நிறுவனங்கள், பசுமை ஆற்றல், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தி பணி போன்ற துறைகளில் இந்தியா இப்போது உலகளாவிய தலைவராக வளா்ந்து வருகிறது.
ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, போலி நாடாளுமன்றங்கள் ஜனநாயகத்தின் கொண்டாட்டம் மற்றும் கொள்கை வகுப்பிற்கான ஒரு உயிருள்ள ஆய்வகமாக உள்ளது.
மாதிரி நாடாளுமன்றத்தின் நோக்கம், நாடாளுமன்ற நடைமுறைகளை நகலெடுப்பது மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தை உண்மையிலேயே தனித்துவமாக்கும் உணா்வை உள்வாங்குவதாகும்.
மாதிரி நாடாளுமன்றத்தில் பங்கேற்கும் இளைஞா்கள், நாடு எதிா்கொள்ளும் குறைந்தபட்சம் ஒரு முக்கிய பிரச்னையைப் பற்றி ஆழமான ஆய்வை மேற்கொள்வதிலும் தீா்வுகளைக் கண்டறிய அதைப் பற்றிய விழிப்புணா்வை தீவிரமாக ஏற்படுத்துவதிலும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.