செய்திகள் :

'இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை'- விசிக தலைவர் திருமாவளவன்

post image

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30) திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 

அப்போது திருமாவளவனிடம் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருகிறது. அதற்கு பதலளித்த அவர், “ அமித்ஷா மட்டும் திரும்ப, திரும்ப அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

பாஜக - அதிமுக கூட்டணி

இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பெரிதாக ஒன்றும்  சொல்லாமல் மௌனம் காத்துவருகிறார் என்று நான் சொல்லி இருந்தேன்.

அவர் அதற்கு அளித்திருக்கும் பதில் பாஜகவிற்கு தான் என்று புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

அதாவது, ‘கூட்டணி ஆட்சி இங்கு இல்லை. அதிமுக அதற்கு உடன்படாது’ என்கிற விடையை பாஜகவிற்குதான்  சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல அதிமுகவை எந்த கொம்பன்னாலும்  கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். 

கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சி செய்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுப்படுத்த வேண்டும். அதிமுகவை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கபளீகரம் செய்ய வாய்ப்பில்லை.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவும் முடியாது. உடன் இருக்கும் கட்சிகளால் மட்டும்தான் விழுங்கிச் செரிக்கிற முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

ஆகவே அந்தக் கருத்தை பாஜகவிற்கு எதிராகச் சொல்லி இருக்கிறார் என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனவே பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது” என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ADMK : 'கூட்டணி ஆட்சி; கறாராக 'நோ' சொல்லும் எடப்பாடி! - பின்வாங்குமா பா.ஜ.க?

'கூட்டணி ஆட்சி சர்ச்சை!'அதிமுக - பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக... மேலும் பார்க்க

தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராம் தொழில்துறைப் பகுதியில், வேதிப் பொருட்கள் தொழிற்சாலை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிகாச்சி கெ... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சென்னையின் முன்னாள் மேயர் சிலை! - கவனிக்குமா மாநகராட்சி?

நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர், இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருடன் பயணித்து அரசியல் செய்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என ஏகப்ப... மேலும் பார்க்க

பாமக: 'பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு...' - அன்புமணி குறித்து எம்எல்ஏ அருள் பேசியது என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்ட... மேலும் பார்க்க