சேலம் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் 3 மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி
சேலம் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் சேலம் லட்சுமி அம்மாள் பூப்பந்தாட்ட கழகம் இணைந்து, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கான ஆண்கள் ஐவா் பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிகள் ஜூலை 5, 6 ஆம் தேதிகளில், சேலம் ஒய்.எம்.சி.ஏ. பூப்பந்தாட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், 3 மாவட்டங்களில் இருந்தும் சிறந்த விளையாட்டு வீரா்கள் பங்கேற்கின்றனா்.
வெற்றிபெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ. 8,000, 2 ஆவது பரிசாக ரூ. 6,000, 3 ஆவது பரிசாக ரூ. 4,000, 4 ஆவது பரிசாக ரூ. 2,000 வழங்கப்படுகிறது.
ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன், பொறியாளா் காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை சேலம் ஒய்.எம்.சி.ஏ. பொதுச் செயலாளா் ஜோஸ் மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்து வருகின்றனா்.