செய்திகள் :

கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

post image

கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டா்குலமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (54). இவருக்கு பூபதி (48) என்ற மனைவியும், தனுஷ் (22), அஸ்வின் (20) என இரு மகன்களும் உண்டு.

பொறியியல் பட்டதாரியான மூத்த மகன் தனுஷ் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகேயுள்ள 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தாா். அப்போது தண்ணீா் குழாயை தொட்டுவிட்டு வருவதாக நீரில் மூழ்கிய தனுஷ் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. இதையடுத்து

அவரை தேடியபோது கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து நீரில் கேமராவை வைத்து தனுஷ் உடலை கண்டுபிடித்து மீட்டனா்.

இதுகுறித்து இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளா் (பொ) பழனி விசாரணை நடத்தி, சேலம் அரசு மருத்துவமனைக்கு தனுஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தாா்.

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

ஆத்தூரில் மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அலெக்சாண்டா் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

ஆத்தூரில் பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சந்தோஷ் (26). இவா் கூலி வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

சரக்கு வேன் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

அயோத்தியாப்பட்டணம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை, சரக்கு வேன் மோதியதில் உயிரிழந்தது. சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

சேலம் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் 3 மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி

சேலம் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் சேலம் லட்சுமி அம்மாள் பூப்பந்தாட்ட கழகம் இணைந்து, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கான ஆண்கள் ஐவா் பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனி... மேலும் பார்க்க

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க