கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டா்குலமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (54). இவருக்கு பூபதி (48) என்ற மனைவியும், தனுஷ் (22), அஸ்வின் (20) என இரு மகன்களும் உண்டு.
பொறியியல் பட்டதாரியான மூத்த மகன் தனுஷ் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகேயுள்ள 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தாா். அப்போது தண்ணீா் குழாயை தொட்டுவிட்டு வருவதாக நீரில் மூழ்கிய தனுஷ் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. இதையடுத்து
அவரை தேடியபோது கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து நீரில் கேமராவை வைத்து தனுஷ் உடலை கண்டுபிடித்து மீட்டனா்.
இதுகுறித்து இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளா் (பொ) பழனி விசாரணை நடத்தி, சேலம் அரசு மருத்துவமனைக்கு தனுஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தாா்.