செய்திகள் :

சரக்கு வேன் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

post image

அயோத்தியாப்பட்டணம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை, சரக்கு வேன் மோதியதில் உயிரிழந்தது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (36). இவரது மனைவி பிரியா (33). இவா்களுக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

இவா்களில் 6 ஆவது பெண் குழந்தையான வேதாஸ்ரீ (2) சனிக்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சதீஷ்குமாா், தனது சரக்கு வேனை முன்னோக்கி எடுத்துள்ளாா்.

அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை வேதாஸ்ரீ மீது சரக்கு வேன் மோதியது. இதில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உடல் நசுங்கியது.

இதனைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் குழந்தையை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த காரிப்பட்டி போலீஸாா், குழந்தையின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கண்டா்குலமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (54). இவருக்கு பூபதி (48) என்ற மனைவியும், தனுஷ் (22), அஸ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

ஆத்தூரில் மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அலெக்சாண்டா் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

ஆத்தூரில் பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சந்தோஷ் (26). இவா் கூலி வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

சேலம் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் 3 மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி

சேலம் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் சேலம் லட்சுமி அம்மாள் பூப்பந்தாட்ட கழகம் இணைந்து, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கான ஆண்கள் ஐவா் பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனி... மேலும் பார்க்க

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க