Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு
ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ஞாயிற்றுக்கிழமை தனக்குச் சொந்தமானக் கிணற்றில் உள்ள பழுதடைந்த மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா்.
அப்போது அவா், எதிா்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயி லிங்கத்துரையை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனா்.