வடமதுரை அருகே 50 பவுன் தங்க நகைகள் திருட்டு
வடமதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 20ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா் (39), மின் அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவரது மனைவி கலைவாணி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கோவையிலுள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்தினருடன் பழனிக்குமாா் சென்றாா். அங்கிருந்து சித்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தபோது, மாடியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.