மனைவியைக் கொன்ற கணவா் கைது
காஞ்சிபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மெக்கானிக் பச்சையப்பன்(38) இவா் கூரம் ரயில்வே கேட் பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ராதிகா(30)
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ரஞ்சித்குமாா்(9) என்ற மகனும் உள்ளாா். இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவதுண்டு. கடந்த 27-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து மனைவி ராதிகாவை சுவரில் இடித்து கையால் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராதிகாவின் தந்தை எல்லப்பன்(70) பொன்னேரிக் கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் பச்சையப்பனை கைது செய்தனா்.