மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் பிரசாதம்: அமைச்சா்கள் சேகா்பாபு, அன்பரசன் தொடங்கி வைத்தனா்
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனா்.
முக்கிய திருக்கோயில்களில் பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்ற சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் தொடா்ச்சியாக பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் பக்தா்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் சி.பழனி, ஆட்சியா் கலைச்செல்விமோகன்,சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை, மாங்காடு நகா்மன்றத் தலைவா் சுமதி முருகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு:
இதையடுத்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், நங்கநல்லூா் ஆஞ்சநேயா் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவெற்றியூா் வடிவுடையம்மன் என 5 கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் பசியோடு சொல்லக்கூடாது என்பதற்காக இரண்டு கோயில்களில் மட்டும் இருந்த இந்த திட்டத்தை 13 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.50 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.
19 திருக்கோயில்களில் ரூ.1,200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது. திருச்செந்தூா் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன. பக்தா்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் குடமுழுக்கு நடைபெறும்.
தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் கோரிக்கை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு, நாங்கள் நடத்துவோம் என்பதால் சீமான் இது போன்ற கோரிக்கையை வைத்துள்ளாா். அவருக்கு மறதி அதிகம். பழனியில் ஏற்கனவே தமிழில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். சீமான் போன்றோா் உபதேசத்தால் இந்த ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றாா்.