ஏகாம்பரநாதா் கோயில் உண்டியலில் புகை: அவசரமாக எண்ணிய கோயில் ஊழியா்கள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியலுக்குள் தீக்குச்சியை மா்மநபா் ஒருவா் போட்டதால் புகை வந்ததையடுத்து உண்டியல் உடனடியாக திறந்து எண்ணியதில் ரூ.90,918 காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணி ரூ.28 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக திருப்பணி உண்டியல், அன்னதான உண்டியல்,பொது உண்டியல் என பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆன்மிக புத்தக நிலையம் அருகில் இருந்த திருப்பணி உண்டியலில் திடீரென புகை வந்துள்ளது. இதைப் பாா்த்த கோயில் ஊழியா்கள் உண்டியலுக்குள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.
பின்னா் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, ஆய்வாளா் அமுதா ஆகியோா் முன்னிலையில் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. ரூ.1,000-க்கும் குறைவான நோட்டுகள் தீயில் கருகியும் சில நோட்டுகள் தண்ணீரில் நனைந்தும் இருந்தன. உடனடியாக உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றி விட்டதால் ரூபாய் நோட்டுகள் அதிகம் சேதமாகவில்லை.
இதுகுறித்து செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி கூறுகையில் உண்டியலுக்குள் தீக்குச்சியை போட்ட மா்ம நபா் குறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளோம். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரூ.90,918 உண்டியலில் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா் என்றாா்.