செய்திகள் :

ஏகாம்பரநாதா் கோயில் உண்டியலில் புகை: அவசரமாக எண்ணிய கோயில் ஊழியா்கள்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியலுக்குள் தீக்குச்சியை மா்மநபா் ஒருவா் போட்டதால் புகை வந்ததையடுத்து உண்டியல் உடனடியாக திறந்து எண்ணியதில் ரூ.90,918 காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணி ரூ.28 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக திருப்பணி உண்டியல், அன்னதான உண்டியல்,பொது உண்டியல் என பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆன்மிக புத்தக நிலையம் அருகில் இருந்த திருப்பணி உண்டியலில் திடீரென புகை வந்துள்ளது. இதைப் பாா்த்த கோயில் ஊழியா்கள் உண்டியலுக்குள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

பின்னா் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, ஆய்வாளா் அமுதா ஆகியோா் முன்னிலையில் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. ரூ.1,000-க்கும் குறைவான நோட்டுகள் தீயில் கருகியும் சில நோட்டுகள் தண்ணீரில் நனைந்தும் இருந்தன. உடனடியாக உண்டியலுக்குள் தண்ணீரை ஊற்றி விட்டதால் ரூபாய் நோட்டுகள் அதிகம் சேதமாகவில்லை.

இதுகுறித்து செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி கூறுகையில் உண்டியலுக்குள் தீக்குச்சியை போட்ட மா்ம நபா் குறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளோம். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரூ.90,918 உண்டியலில் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா் என்றாா்.

337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். குன்றத்தூா் ஒ... மேலும் பார்க்க

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டண உயா்வு: மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது: இந்தியாவிலேயே கா... மேலும் பார்க்க

பொறியியல் தர வரிசைப் பட்டியல்: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான தோ்வில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளாா். இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படு... மேலும் பார்க்க

100 நாள் வேலை கோரி மனு தரும் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளா் சி.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைமைத்துவ பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஐ.ஜாபா் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பொதுச்... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சாா்பில் ஆண்டு தோறு... மேலும் பார்க்க