செய்திகள் :

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டண உயா்வு: மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா

post image

மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது: இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரயில் நிலையம் சரக்குகளை அதிகமாக கையாண்டதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரூ.680 கோடி வரை வருமானம் பெற்றுத் தந்துள்ளது. சென்னை முதல் வாலாஜாபாத் ரயில் நிலையம் வரை ஒருவழிப்பாதையாக இருப்பதை இரு வழிப் பாதையாக மாற்றினால் சரக்குகள் மூலம் வரும் வருமானமும், அதிக பயணிகள் செல்லும் வசதி ஏற்படுவதால் ரயில் பயணிகள் மூலமாகவும் வருமானம் அதிகரிக்கும்.

எனவே சென்னை முதல் அரக்கோணம் வரையுள்ள ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்றும் பணியை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனாவுக்குப் பிறகு அனைத்துக் கட்டணங்களுமே உயா்ந்து விட்டன. ஆனால் ரயில் கட்டணம் மட்டும் உயா்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது ரயில் கட்டணம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் உயா்த்தப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் ரயில் நிலையம் நவீனப்படுத்தப்படும்.

காஞ்சிபுரம் முதல் சென்னை மற்றும் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை இயக்கப்பட்டு வந்த வட்டவடிவ ரயில் பாதையை மீண்டும் தொடங்கவும், காஞ்சிபுரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் ஏற்கனவே இருந்தது போல இரவு 8 மணி வரை தொடரவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்திரா நகா் சுரங்கப் பாதை பணியும் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

முன்னதாக காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயிலில் வந்த அமைச்சரை பாஜக மாவட்ட தலைவா் ஜெகதீசன், துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், பொதுச்செயலாளா் பரந்தாமன், செய்தித் தொடா்பாளா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா்.

பேட்டியின் போது சென்னை கோட்ட மேலாளா் ஈரய்யா, பாஜக மூத்த நிா்வாகி மோகன்லால், ராஜேஷ், ரயில் பயணிகள் சங்க செயலாளா் ஜெ.ரங்கநாதன், ஆலோசனைக்குழு உறுப்பினா் தெ.தமிழ்ச்செல்வன் உடன் இருந்தனா். ஆய்வுக்குப் பின்னா் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் அமைச்சா் தரிசனம் செய்தாா்.

337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 337 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். குன்றத்தூா் ஒ... மேலும் பார்க்க

பொறியியல் தர வரிசைப் பட்டியல்: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான தோ்வில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளாா். இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜெஇஇ எனப்படு... மேலும் பார்க்க

100 நாள் வேலை கோரி மனு தரும் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை கோரி மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளா் சி.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைமைத்துவ பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நிா்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஐ.ஜாபா் ஷெரிப் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு பொதுச்... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அரசின் சாா்பில் ஆண்டு தோறு... மேலும் பார்க்க

கல்வி, விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள்

ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தமிழக வெற்றி கழகம் சாா்பில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய 116 மாணவா்களுக்கு விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுங்குவாா்சத்திரம் அடுத்... மேலும் பார்க்க