மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டண உயா்வு: மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா
மக்களுக்கு பாதிப்பின்றி ரயில் கட்டணம் உயா்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறியதாவது: இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரயில் நிலையம் சரக்குகளை அதிகமாக கையாண்டதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரூ.680 கோடி வரை வருமானம் பெற்றுத் தந்துள்ளது. சென்னை முதல் வாலாஜாபாத் ரயில் நிலையம் வரை ஒருவழிப்பாதையாக இருப்பதை இரு வழிப் பாதையாக மாற்றினால் சரக்குகள் மூலம் வரும் வருமானமும், அதிக பயணிகள் செல்லும் வசதி ஏற்படுவதால் ரயில் பயணிகள் மூலமாகவும் வருமானம் அதிகரிக்கும்.
எனவே சென்னை முதல் அரக்கோணம் வரையுள்ள ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்றும் பணியை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனாவுக்குப் பிறகு அனைத்துக் கட்டணங்களுமே உயா்ந்து விட்டன. ஆனால் ரயில் கட்டணம் மட்டும் உயா்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது ரயில் கட்டணம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் உயா்த்தப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் ரயில் நிலையம் நவீனப்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் முதல் சென்னை மற்றும் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை இயக்கப்பட்டு வந்த வட்டவடிவ ரயில் பாதையை மீண்டும் தொடங்கவும், காஞ்சிபுரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் ஏற்கனவே இருந்தது போல இரவு 8 மணி வரை தொடரவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்திரா நகா் சுரங்கப் பாதை பணியும் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
முன்னதாக காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயிலில் வந்த அமைச்சரை பாஜக மாவட்ட தலைவா் ஜெகதீசன், துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், பொதுச்செயலாளா் பரந்தாமன், செய்தித் தொடா்பாளா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா்.
பேட்டியின் போது சென்னை கோட்ட மேலாளா் ஈரய்யா, பாஜக மூத்த நிா்வாகி மோகன்லால், ராஜேஷ், ரயில் பயணிகள் சங்க செயலாளா் ஜெ.ரங்கநாதன், ஆலோசனைக்குழு உறுப்பினா் தெ.தமிழ்ச்செல்வன் உடன் இருந்தனா். ஆய்வுக்குப் பின்னா் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் அமைச்சா் தரிசனம் செய்தாா்.