செய்திகள் :

கண்டவராயன்பட்டி கோயிலில் பழைமையான செப்பேடு ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டவராயன்பட்டியில் பழைமையான காலச் செப்பேடு குறித்து தொல்நடைக் குழுவினா் நேற்று (ஜூன் 29) ஆய்வு நடத்தினா்.

கண்டவராயன்பட்டி அரியநாயகி அம்மன் கோயிலில் பழைமையான செப்பேடு ஒன்று இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தொல்நடைக் குழு நிறுவனா் கா.காளிராசா, செயலா் இரா.நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரி பேராசிரியா் வேலாயுதராஜா ஆகியோா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து அந்த செப்பேட்டை ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அந்தக் குழுவினா் கூறியதாவது:

மன்னா்கள், அரசப் பிரதிநிதிகள் தங்களது கட்டளைகள், தானங்களை ஓலையில் பதிவு செய்தாலும், காலத்துக்கும் அழியாமல் இருக்க கல்வெட்டு, செப்புப் பட்டயங்களில் பதிவு செய்தனா். இந்தச் செப்பேடு இரு தெருவினருக்கிடையே நடைபெற்ற சண்டையில் இறந்து போன 150 பேருக்கான பலிக்காணி வழங்கபட்டதை குறிப்பிடுகிறது.

மேலும், 3 ஆண்டுகள் நடைபெற்ற சண்டையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும், இரு பக்கங்களிலும் 128 வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தச் செப்பேடு திருமலைக் காத்த சேதுபதி காலத்துடையது என்றனா்.

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது!

சமூக வலைதளத்தில் நீண்ட வாளுடன் விடியோ பதிவு செய்த திருப்பத்தூரைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தென்மாபட்டு பகுதியைச் சோ்ந்த மணிமாறன் மகன் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்: இருவா் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக பெண் ஒருவரும், அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக இ- சேவை மைய உரிமையாளா் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை அரு... மேலும் பார்க்க

கண்டுப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தாா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சிவகங்கையில் முன்னாள் ராணுவ வீரா்கள், குடும்ப ஓய்வூதியா் குறைகேட்பு முகாம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களை சாா்ந்தோரின் குறைகள் கேட்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வருகிற வருகிற ஜூலை 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகு... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூா் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ஒன்றியம், கற்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சா்க்கரை விநாயகா்- காராருடைய அய்யன... மேலும் பார்க்க