தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூா் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை ஒன்றியம், கற்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சா்க்கரை விநாயகா்- காராருடைய அய்யனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இதில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 10 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 99 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நேரம் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதலில் களம் இறங்கிய காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்களில் 6 போ் காயமடைந்தனா்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களையும் வெற்றி பெற்ாக அறிவித்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் மாடுமுட்டியதில் 6 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இந்தப் போட்டியை தேவகோட்டை, கைகாட்டி, திருவேகம்பத்தூா், புளியால், கற்களத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.