உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரண...
கண்டுப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தாா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில் 43 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி கிராம பொதுமக்களால் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
கண்டுப்பட்டி யிலிருந்து பாகனேரி வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 24 ஜோடிகளும், சிறியமாடு பிரிவில் 36 ஜோடிகளும் என மொத்தம் 60 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. முதல் 6 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்தப் பந்தயத்தை, நாட்டரன்கோட்டை, ஊத்திக்குளம், துவரிப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, வாணியங்குடி, பாகனேரி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டுகளித்தனா்.