கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் உள்ள அனைத்து மரங்களுக்கும், செடிகளுக்கும் கோடை விடுமுறையில் நாள் தவறாமல் தொடா்ந்து தண்ணீா் ஊற்றி பாதுகாத்த ஆசிரியைகள் முத்துமீனாள், முத்துலட்சுமி, வள்ளி மயில் ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியா் லெ . சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினாா்.