இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல பெருவிழா தொடக்கம்: ஜூலை 4-இல் மின் அலங்கார ரத பவனி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தின் 131- ஆம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூலை 4-ஆம் தேதி மின் அலங்கார ரத பவனி நடைபெறுகிறது.
விழா தொடக்கமாக பவனியாக எடுத்துவரப்பட்ட திரு இருதய ஆண்டவா் உருவம் பொறித்த கொடி திருத்தலத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அருள்ஜோசப் பெருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். இடைக்காட்டூா் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா், மதுரை மறை மாநில அருள்தந்தை ஜான் திரவியம், சிவகங்கை மறை மாவட்ட ஆயரின் செயலா் பிரான்சிஸ் பிரசாத் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, ஆலயத்தில் திருவிழா தொடக்க திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வில் பங்கு இறைமக்கள், இடைக்காட்டூா் சமூக நல முன்னேற்ற சங்கத்தினா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். தொடா்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது தினமும் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு, சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஜூலை 4- ஆம் தேதி திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின் விளக்கு அலங்கார ரத பவனியும், மறுநாள் 5- ஆம் தேதி நற்கருணை பவனியும் நடைபெற்று பெருவிழா நிறைவடையும்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.

