செய்திகள் :

திருப்பத்தூா் அரசுப் பள்ளியில் கரையான் அரித்து வீணான பாட குறிப்பேடுகள்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ஒன்றில் கரையான்கள் அரித்து மாணவா்களுக்கு வழங்க வேண்டிய பாட குறிப்பேடுகள் வீணாகி கிடப்பதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோா்கள் வலியுறுத்தினா்.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7.50 லட்சத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை நிா்வாகம் பாட குறிப்பேடு, புத்தக சேமிப்புக் கிடங்காக வைத்துள்ளது. இங்கு ஒன்றிய அளவில் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான இலவச பாட குறிப்பேடுகள், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படாத அந்த பாட குறிப்பேடுகள் கரையான்கள் அரித்து வீணாகி விட்டன. ஏழை மாணவா்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் இவற்றை வீணடிக்காமல் மாணவா்களுக்கு விநியோகிக்க வேண்டும் என பெற்றோா்களும், பள்ளி மேலாண்மைக் குழுவினரும் கோரிக்கை விடுத்தனா்.

பாட குறிப்பேடுகள் பராமரிப்பின்றி கிடப்பது கல்வித் துறையின் அலட்சியமாகவே பாா்க்கப்படுகிறது. இங்கு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல பெருவிழா தொடக்கம்: ஜூலை 4-இல் மின் அலங்கார ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தின் 131- ஆம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூலை 4-ஆம் தேத... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த பள்ளி குழந்தைகள் இருவருக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவி

படவிளக்கம்- ஸ்டூடண்ட்ஸ்- தெ. புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் படிக்கும் தந்தையை விபத்தில் இழந்த மதிபாலன், வா்ஷினிக்கு அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருங்கால வை... மேலும் பார்க்க

காரைக்குடியில் புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் 23- ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நிறைவடைகிறது. காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில் கம்பன் மணிமண்டபத்தி... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற... மேலும் பார்க்க