செய்திகள் :

சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?

post image

சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.

ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி, அறிவியல் சாதனையில் ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் எலிகளைக் கொண்டுதான் முதலில் ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். ஏனென்றால் எலிகளிடம் அந்த ஆராய்ச்சி முன்னேற்றம் அடைந்தால் மனிதர்களிடமும் முடிவு கிடைக்கும் என்பதால் எலிகளிடம் முயன்று பார்ப்பார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சியில், மனிதர்களிடம் தற்போது இதனை முயற்சிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலி
எலி

எப்படி சாத்தியம்?

இரண்டு ஆண் எலிகளிடமிருந்து விந்தணுக்களை எடுத்து, பெண் டிஎன்ஏ இல்லாமல் பெண் எலிகளின் கருவை மட்டும் பயன்படுத்தி எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். அதாவது, எலிகளின் விந்தணுக்களை முட்டை செல்லுக்குள் செலுத்தி பின்னர், எபிஜெனோம் எடிட்டிங் எனப்படும் ஒரு சிறப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இரண்டு எலிகள் மட்டுமே உயிர் பிழைத்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.

அப்படி வளர்ந்த இரண்டு எலிகள் பின்னர் பெண் எலிகளுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து குட்டிகளை ஈன்றுள்ளன. இந்த ஆராய்ச்சியில் பிறந்த ஆண் எலிகளால் உயிர்வாழ மட்டுமல்ல இனப்பெருக்கம் செய்யவும் முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு அதிக எண்ணிக்கையிலான கருமுட்டைகள் தேவைப்படுவதாலும், அதிக எண்ணிக்கையிலான பெண் எலிகள் (வாடகை தாய்மார்கள்) தேவைப்படுவதாலும் வெற்றி விகிதம் குறைவாக உள்ளது எனவும், இதனை மனிதர்களுக்கு முயற்சிப்பது என்பது தற்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மனித மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்றும் AI-யை உருவாக்கும் விஞ்ஞானிகள்; எப்படி தெரியுமா?

மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு AI அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை அலைகளை வார்த்தைகளாக மாற்ற AI மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர்.மருத்து... மேலும் பார்க்க

`ரைஸ் குக்கர்' கண்டுபிடித்தது யார் தெரியுமா? சமையலில் புரட்சியை ஏற்படுத்திய குடும்பத்தின் கதை!

பெரும்பாலான வீடுகளில் மின்சார ரைஸ் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரைஸ் குக்கரை பயன்படுத்துவது நோக்கம் சமையல் நேரத்தை குறைப்பதாகும். மேலும் அதுவே அரிசியை சோறாக மாற்றி சாப்பிடும் வரை சூடாக வைத்திருக... மேலும் பார்க்க

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.ஒவ்வ... மேலும் பார்க்க

`எவரெஸ்ட் பனி மலையில் பிடிபட்ட ராஜநாகங்கள்' - எச்சரிக்கும் காலநிலை; சூழல் விஞ்ஞானிகள் அஞ்சுவது ஏன்?

நேபாளம் நாட்டில் எவெரெஸ்ட் மலைக்கு அருகில் 9 ராஜநாகம் மற்றும் ஒரு ஒற்றைக் கண் நாகம் (Monocled cobra) என10 விஷ பாம்புகள் ஒன்றரை மாத இடைவெளியில் பிடிபட்டுள்ள நிகழ்வு சூழல் விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கியி... மேலும் பார்க்க

Tardigrades: விண்வெளியில் 'நீர் கரடிகள்' குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் - ஏன் தெரியுமா?!

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்போது மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனைகளில், டார்டிகிரேடுகள் குறித்து ஆராய்வதும் அடங்கும். டார்டிகிரேடுகள் ... மேலும் பார்க்க

US-China: ``சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' - அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது. புசாரியம் கிராமினேரம் (Fusarium gra... மேலும் பார்க்க