`லாக் அப் மரணங்களில் தென் மாநில அளவில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது' - ஆர்.பி....
சீனா: 2 ஆண் எலிகளின் DNA மூலம் குட்டிகளை உருவாக்கிய விஞ்ஞானிகள்.. ஆராய்ச்சி சொல்வதென்ன?
சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆண் எலிகளின் DNA-க்களை எடுத்து, எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். பின்னர் இந்த எலிகள் வளர்ந்து, பெண் எலிகளுடன் சேர்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.
ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி, அறிவியல் சாதனையில் ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் எலிகளைக் கொண்டுதான் முதலில் ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். ஏனென்றால் எலிகளிடம் அந்த ஆராய்ச்சி முன்னேற்றம் அடைந்தால் மனிதர்களிடமும் முடிவு கிடைக்கும் என்பதால் எலிகளிடம் முயன்று பார்ப்பார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சியில், மனிதர்களிடம் தற்போது இதனை முயற்சிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படி சாத்தியம்?
இரண்டு ஆண் எலிகளிடமிருந்து விந்தணுக்களை எடுத்து, பெண் டிஎன்ஏ இல்லாமல் பெண் எலிகளின் கருவை மட்டும் பயன்படுத்தி எலிக் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். அதாவது, எலிகளின் விந்தணுக்களை முட்டை செல்லுக்குள் செலுத்தி பின்னர், எபிஜெனோம் எடிட்டிங் எனப்படும் ஒரு சிறப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இரண்டு எலிகள் மட்டுமே உயிர் பிழைத்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.
அப்படி வளர்ந்த இரண்டு எலிகள் பின்னர் பெண் எலிகளுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து குட்டிகளை ஈன்றுள்ளன. இந்த ஆராய்ச்சியில் பிறந்த ஆண் எலிகளால் உயிர்வாழ மட்டுமல்ல இனப்பெருக்கம் செய்யவும் முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு அதிக எண்ணிக்கையிலான கருமுட்டைகள் தேவைப்படுவதாலும், அதிக எண்ணிக்கையிலான பெண் எலிகள் (வாடகை தாய்மார்கள்) தேவைப்படுவதாலும் வெற்றி விகிதம் குறைவாக உள்ளது எனவும், இதனை மனிதர்களுக்கு முயற்சிப்பது என்பது தற்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.