செய்திகள் :

`ரைஸ் குக்கர்' கண்டுபிடித்தது யார் தெரியுமா? சமையலில் புரட்சியை ஏற்படுத்திய குடும்பத்தின் கதை!

post image

பெரும்பாலான வீடுகளில் மின்சார ரைஸ் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரைஸ் குக்கரை பயன்படுத்துவது நோக்கம் சமையல் நேரத்தை குறைப்பதாகும். மேலும் அதுவே அரிசியை சோறாக மாற்றி சாப்பிடும் வரை சூடாக வைத்திருக்கும் என்பதால் இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

இந்த ரைஸ் குக்கர் 1950-களில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்டுபிடிப்புக்கு பிறகு சமையலறைகளில் ரைஸ் குக்கர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.

சமீபத்தில் இந்த ரைஸ் குக்கரை கண்டுபிடித்தவரின் மகன் அய்ஜி மினாமி இது குறித்து கூறுகையில் "எனது குடும்பமே இதற்காக பாடுபட்டது. எனது தாய் உள்பட ஜப்பானிய பெண்கள் ஹகாம்ஸ் எனும் அரிசி குக்கர்களை பயன்படுத்தினர்.

ஒரு நாளைக்கு மூன்று முறை பரிசோதனை நிலையில் இதனை பயன்படுத்தினர். சரியான பதத்தில் எப்படி சமைப்பது என்பதில் கவனம் கொண்டு அந்த அரிசி குக்கரை பரிசோதித்து வந்தனர்.

அய்ஜி மினாமி

அரிசி குக்கரை கண்டுபிடித்தவர் யோஷிதாதா மினாமி

பகல், நள்ளிரவு என எல்லா வெப்பநிலையிலும் அந்த ரைஸ் குக்கரை பரிசோதித்தனர். எப்படி சோறு வெந்துள்ளது, என்பதை பார்ப்பது அவர்களின் வீட்டில் உள்ளவர்களின் வேலையாக இருந்தது.

சில சமயங்களில் அரிசி வெந்திருக்காது, சில சமயங்களில் கருகிவிடும். தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு அதனை மேம்படுத்தும் முயற்சியில் குடும்பத்தினர்கள் உதவியாக இருந்துள்ளனர்.

ஒரு வழியாக எனது தந்தை நன்கு வேகவைத்த சோறை அந்த குக்கரில் சமைத்தார் ” என்று அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் 1955-ல் யோஷிதாதா மினாமியின் குக்கர் தயாரானது. ஜப்பானிய சமையலறையில் நேரத்தை மிச்சம்படுத்தி இது பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.ஒவ்வ... மேலும் பார்க்க

`எவரெஸ்ட் பனி மலையில் பிடிபட்ட ராஜநாகங்கள்' - எச்சரிக்கும் காலநிலை; சூழல் விஞ்ஞானிகள் அஞ்சுவது ஏன்?

நேபாளம் நாட்டில் எவெரெஸ்ட் மலைக்கு அருகில் 9 ராஜநாகம் மற்றும் ஒரு ஒற்றைக் கண் நாகம் (Monocled cobra) என10 விஷ பாம்புகள் ஒன்றரை மாத இடைவெளியில் பிடிபட்டுள்ள நிகழ்வு சூழல் விஞ்ஞானிகளை கவலைக்குள்ளாக்கியி... மேலும் பார்க்க

Tardigrades: விண்வெளியில் 'நீர் கரடிகள்' குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் - ஏன் தெரியுமா?!

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்போது மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனைகளில், டார்டிகிரேடுகள் குறித்து ஆராய்வதும் அடங்கும். டார்டிகிரேடுகள் ... மேலும் பார்க்க

US-China: ``சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' - அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பூஞ்சை, வேளாண்-பயங்கரவாத ஆயுதமாக செயல்பட சாத்தியமுள்ளது என அமெரிக்க நீதித்துறைத் தெரிவித்துள்ளது. புசாரியம் கிராமினேரம் (Fusarium gra... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போகும் முதல் இந்தியர் - யார் இந்த சுபான் ஷு சுக்லா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீர... மேலும் பார்க்க

Space: "விண்வெளியிலிருந்து சிக்னல் அனுப்பும் 'மர்ம' பொருள்" - அறிவியலாளர்கள் சொல்வது என்ன?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒருமுறை பிரபஞ்சத்திலிருந்து மர்மப் பொருளொன்று பூமிக்கு எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ சிக்னல்களை அனுப்புவதாகக் கண்டறிந்துள்ளனர்.இது இன்றுவரை ... மேலும் பார்க்க