செய்திகள் :

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் மாற்றம்!

post image

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு மாவட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிக்பளாப்பூரில் உள்ள நந்திமலையில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயரை பெங்களூரு வடக்கு மாவட்டம் என்று மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெங்களூரு ஊரக மாவட்டத்தில் தற்போது ஹொசகோட்டே, தேவனஹள்ளி, தொட்டபளாப்பூா், நெலமங்களா ஆகிய 4 வட்டங்கள் உள்ளன. 1980ஆம் ஆண்டு பெங்களூரு மாவட்டம், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம் என்று பிரிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு எச்.டி.குமாரசாமி முதல்வராக இருந்தபோது, பெங்களூரு ஊரக மாவட்டத்தில் இருந்து ராமநகரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநகரம் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என்று மே மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் அண்டை மாவட்டமாக இருக்கும் சிக்பளாப்பூா் மாவட்டத்தின் பாகேபள்ளி என்ற ஊரின் பெயா் தெலுங்கு மொழியில் அமைந்துள்ளதால், அந்த நகரின் பெயரை பாக்யநகா் என்றும் மாற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு

கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அர... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் கா்நாடக முதல்வராகவே நீடிப்பேன்: சித்தராமையா

5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராகவே நீடிப்பேன் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து சிக்பளாப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராக ந... மேலும் பார்க்க

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்: சித்தராமையா

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா வலியுறுத்தினாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்... மேலும் பார்க்க