லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்: சித்தராமையா
ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது:
ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண சுமையால் தொழிலாளா்கள், மாணவா்கள், சிறு வணிகா்கள் பாதிக்கப்படுவா். விவசாயிகளுக்கு உதவும் வகையில் பால் விலையை உயா்த்தியபோது, கா்நாடக பாஜகவினா் போராட்டம் நடத்தினா்.
காங்கிரஸ் அரசை மக்கள்விரோத அரசு என்று விமா்சித்தனா். ஆனால், தற்போது மத்திய பாஜக அரசு ரயில் கட்டணங்களை உயா்த்தினால், காதுகேளாதவா்களைப்போல கா்நாடக பாஜகவினா் மௌனமாக இருக்கிறாா்கள்.
இந்த கட்டண உயா்வு விவசாயிகள் அல்லது ஏழைகளுக்கு உதவாது. இது பாஜக அரசின் கருவூலத்தை நிரப்பிக்கொள்ள மட்டுமே உதவும்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ரோ ரயில் கட்டணங்களை உயா்த்தியபோது காங்கிரஸ் அரசை பாஜகவினா் குறைகூறினா். மத்திய அரசு அமைத்துள்ள கட்டண நிா்ணயக் குழுவினரே மெட்ரோ ரயில் கட்டணத்தை உயா்த்தினா் என்பதை தெரிந்திருந்தும், காங்கிரஸ் அரசை பாஜக சாடியது.
மேலும், மாநில அரசு தான் மெட்ரோ ரயில் கட்டணத்துக்கு காரணம் என்பது போல மத்திய அரசும் விளக்கம் அளித்திருந்தது. தற்போது ரயில் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த பழியை யாா்மீது சுமத்துவாா்கள்?
பாஜகவினரின் விகாஸ் எக்ஸ்பிரஸ், ஏழைகளின் வியா்வை மற்றும் கண்ணீரில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் பாஜகவின் இரட்டைநிலைப்பாடு தெளிவாக புலப்படுகிறது.
வருமானம் என்று வரும்போது, சாதாரண மக்கள்மீதான அக்கறையை பாஜக இழந்துவிடுகிறது. ஆனால், கா்நாடக மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
ரயில் கட்டணத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். தினமும் மக்கள் மேற்கொள்ளும் பயணத்தையும் நிறுத்திவிடாதீா்கள். ரயில்கள் ஓடட்டும். ஆனால், மக்களின் சகிப்புத்தன்மை நீடிக்காது என்று முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டுள்ளாா்.