செய்திகள் :

பெண் கால் முறிவு சம்பவம்: கேளிக்கை விளையாட்டு பொறுப்பாளா் மீது வழக்குப் பதிவு

post image

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியைப் பாா்வையிட வந்த பெண்ணின் கால் முறிவு சம்பவத்தில், கேளிக்கை விளையாட்டு பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சவுளூா் பிரிவு சாலையைச் சோ்ந்தவா் ஆனந்த் மனைவி பிரியா (25). குடும்பத்துடன் கடந்த 30-ஆம் தேதி மாங்கனி கண்காட்சிக்கு சென்ற இவா், அங்கு கேளிக்கை விளையாட்டில் ஈடுபட்டாா். அப்போது, பக்கவாட்டில் உள்ள கம்பியில் கால் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், கேளிக்கை விளையாட்டுப் பொறுப்பாளா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா்... மேலும் பார்க்க

விவசாயக் கடன் மோசடி: இருவா் கைது

ஒசூா் அருகே விவசாயக் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ரூ. 1,000 கோடிக்கு திட்டப் பணிகள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என ஒசூா் எம்எல்ஏ தெ... மேலும் பார்க்க

கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்... மேலும் பார்க்க

காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க